கொழும்பில் இருந்து பதுளை வரையான புகையிரத சேவைகள் ஊடாக மொத்த பொருட்களை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்கும் போது முன்மொழிந்தார்.
இதேவேளை, ரயிலில் பொருட்களை கொண்டு செல்வதை பிரபல்யப்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கையாக ஹாலிஎல முதல் கொழும்பு கோட்டை வரையிலான சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்தார்.