திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு கோரப்பட்ட அனுமதி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விகாரையை நிர்மாணிப்பதால் ஏற்படும் பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமாருக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன், விகாரை கட்டுவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,
பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.