யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி வேண்டி போராட்டம்
யாழ்ப்பாணத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இது வடக்கு மாகாணத்தில் மாதாந்தம் முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் ஒரு பகுதியாகவே அமைந்தது.
குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் தொடங்கி, ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதிகளை தாண்டி, யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றது.
அங்கு ஒன்று கூடிய உறவுகள், தங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நிலையைப் பற்றிய சர்வதேச தீர்வை கேட்டுக் கொண்டு, “சர்வதேசம் தீர்வை வழங்க வேண்டும்” எனும் சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.