முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த அஞ்சலி!
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இந்திய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று (30.12.2024), கொழும்பு 03, காலி வீதியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அவர் இறுதி அஞ்சலியை செலுத்தியபோது, இலங்கையிலுள்ள இந்திய இரங்கல் புத்தகத்திலும் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலியை பதிவு செய்தார்.
இதன்போது, மறைந்த மன்மோகன் சிங்கிற்கான அஞ்சலியை முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் செலுத்தினார். அவர் மன்மோகன் சிங்கிற்கான இரங்கல் புத்தகத்தில் தனது இரங்கலை பதிவு செய்தார்.
இந்திய அரசு, மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில், டிசம்பர் 26, 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், டிசம்பர் 30 முதல் ஏழு நாட்கள் துக்கத்தை அறிவித்துள்ளது.