எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட முச்சக்கர வண்டி சாரதிகளின் பிரச்சினைகளை தீர்க்க தலையிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி சங்க அதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
முச்சக்கர வண்டி அதிகாரிகளின் கோரிக்கைகள் அடங்கிய பிரேரணை ஒன்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.