யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று காலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் வழக்கு விசாரணைகள் 1.30 மணித்தியாலங்கள் தாமதமாகவே ஆரம்பமாகின.