Welcome to Jettamil

சிறார்களின் அந்தரங்க காணொளிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

சிறார்களின் அந்தரங்க காணொளிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த வருடம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களின் அந்தரங்க காணொளி காட்சிகள் சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அதிர்ச்சி தகவலை பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் அவர்களின் நிர்வாணத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த காணொளிகள் வைரலாக பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த காணொளிகளை பதிவேற்றியவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சில தொழில் வல்லுநர்கள் கூட இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.

இவ்வாறான சம்பவங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த வருடத்தில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை