Welcome to Jettamil

தீபாவளியை முன்னிட்டு சப்ரகமுவ மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு!

Share

தீபாவளியை முன்னிட்டு சப்ரகமுவ மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு!

தீபாவளியைத் தொடர்ந்து சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு மட்டும் விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுதினமான அக்டோபர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாளான 21ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதால், அதற்குப் பதிலாக எதிர்வரும் அக்டோபர் 25ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாகச் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல தமிழ்ப் பாடசாலைகளுக்கும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை