இன்றையதினம் நாடு தழுவிய கர்த்தாலை முன்னிட்டு வணிக நிறுவனங்களை மூடுமாறு மிரட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.