Welcome to Jettamil

தமிழக முதல்வரின் உதவிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மகிந்த கடிதம்

Share

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்து, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச கடிதம் எழுதி உள்ளார்.

‘தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை, தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது.

இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என்று அந்தக் கடிதத்தில், அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை