பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்
டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில், திடீரென சுகவீனமடைந்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பிரான்ஸில் வாழ்ந்த 81 வயதுடைய அந்த இலங்கைப் பெண் விமானத்தில் பயணித்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன, கட்டார் எயார்வேஸ் (Qatar Airways) விமானம் பயணித்த அந்த பெண்ணுக்கு அவசரமாக சிகிச்சை தேவைப்பட்டது. அதன் பிறகு, எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, மருத்துவ குழுக்கள் விமான நிலையத்திற்கு விரைந்து வரவழைக்கப்பட்டன, ஆனால் அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இருப்பினும், எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், பிரான்ஸ் பிரஜையான அந்த பெண்ணின் மகனிடம் இது குறித்து தகவல் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், அவரின் உடலை பிரான்ஸுக்குக் கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.