மீண்டும் ரணிலை நாடும் இலங்கை மக்கள்: அநுர அரசாங்கத்தின் ஆட்டம்?
இலங்கை அரசியலில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியமைத்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசு வரலாற்றில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அநுர அரசாங்கம் குறித்த மக்களின் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் மிகுந்த நிலையில் இருந்தது.
ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்க பல முயற்சிகள் எடுத்திருந்தாலும், மக்களின் வாழ்வாதாரம் முன்னேறாமல் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக, மக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) தற்போது உள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை ஒப்பிட்டு தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
நன்றி: ஐ பி சி