தளபதி விஜயை சந்திக்க ராஜபக்சே குடும்பம் ஆவல்
தென்னிந்திய நடிகர் தளபதி விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘The Greatest Of All Time‘ படத்தின் ஒரு பகுதியை படமாக்க விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய திரைப்பட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக படக்குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்தால் அவரை சந்திக்க முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஆர்வமாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்காக தளபதி விஜய்யை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள தளபதி விஜய் இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரை சந்தித்தால் அது அவருக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் என இந்திய அரசியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.