சிறப்பாக நடைபெற்ற வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா..!
இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.
அதாவது வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ராட்சத, விசித்திர ‘பட்டத் திருவிழா’ நேற்று (ஜன. 15) வல்வெட்டித்துறை உல்லாச கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.