மின்கட்டண திருத்தம் குறித்து இன்று இறுதி வாய்ப்பு
இலங்கையில் உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் செயல்முறை இன்று (10) நிறைவடைகிறது.
இந்த கருத்து பெறும் நடவடிக்கை கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய முறையில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று, மேல் மாகாணங்களின் பொதுமக்களின் கருத்துக்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பெறப்படவுள்ளது.
மின்கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.