யாழில் அடுத்தடுத்து துயரம் – எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் உயிரிழப்பு
யாழ், கரவெட்டி பகுதியில் எலிக்காய்ச்சலால் 23 வயதான இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கரவெட்டி தல்லையம்பலம் பகுதியில் வசிப்பவரான கிருபாகரன் கிருசாந்தன் என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:30 மணியளவில் உயிரிழந்தார்.
சுகயீனமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், அவரின் உடலில் நோய் அதிகரிக்க , யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.