கிளிநொச்சி பளையைச் சேர்ந்த, பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தரும் சமுக சேவையாளருமான தனபாலசிங்கம் தர்சிகன் (வயது 31) அவர்களின் பரிதாப மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த இளம் குடும்பஸ்தர் இரத்தப் புற்றுநோய் காரணமாக பிரான்ஸ் நாட்டில் நேற்று (09) உயிரிழந்துள்ளார்.
அதாவது கடந்த கால யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த இவர் உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் இவர் திருமணம் செய்து 02 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.