தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடைய நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது இனந்தெரியாத சில 8 பேர் கொண்ட குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் கடுமையாக சேதப்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
குறித்த மர்மக்குழுவினர் அத்துமீறி நுழைந்து அடாவடி தாக்குதலில் ஈடுபட்ட காட்சிகள் சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.