தேசிய பாதுகாப்புத்தினத்தின் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்புத்தினத்தின் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினை வேந்தல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நினைவு கூரப்பட்டது.
இவ் நினைவுதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக தேசியகொடியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஏற்றிவைத்தார்.
பின்னர் மாவட்ட கேட்போர் கூடத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் ஆத்மாசாந்தி விளக்கேற்றல் பிராத்தனை நிகழ்வும், இரண்டு நிமிடமென அஞ்சலியுடன் நினைவூப்பேருரையும், விழிப்புணர்வூட்டலும் இடம்பெற்றது
இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலை பிரதிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனன், மற்றும், சர்வமதத்தலைவர்கள் பதவிநிலை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்ட ஆத்மாசாந்தி பிராத்தனையில் ஈடுபட்டனர்.