Welcome to Jettamil

நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட்ட 8 பேர் கைது…

Share

போதைப்பொருள் பாவனை தொடர்பில், ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையிலிருந்து கோவாவிற்கு இயக்கப்படும் சொகுசு கப்பலில், போதைப்பொருள் விருந்து நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பாய் பிரிவு பணிப்பாளர் சமீர் வாங்கடே தலைமையில் அதிகாரிகள், இந்த சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று அனுமதிச் சீட்டுக்களைப் பெற்று பயணம் செய்தனர்.

கப்பல் மும்பையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விருந்து ஆரம்பமானது.

இந்த விருந்தில் அனைவரும் ஹசிஷ், கொகைன் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தினர்.

அதன்போது பொலிஸ் அதிகாரிகள், சோதனை நடத்தி விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள்,

போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 13 பேரைத் தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.

அனைவரிடமும் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை இடம்பெற்ற நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட்ட 8 பேரைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்யன் கான் உட்பட்ட 3 பேரை பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை