Welcome to Jettamil

பாடசாலைகளை மீள திறக்கும் நடவடிக்கை ஆரம்பம்…

Share

ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையினால், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்தவுடன்,

பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜூம் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கெஹலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, “12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் உட்பட சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பல அளவுகோல்களை சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன்பின்னர் தரம் 7 முதல் தரம் 13 வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை