நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 131பேர் மரணமடைந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 10,995ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த பல நாட்களாக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றில் 200ஐத் தாண்டிச் சென்ற நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது