Monday, Jan 13, 2025

வடக்கில் 3 பாடசாலைகள் இலங்கையின் சிறந்த பாடசாலையாக தேர்வு..!

By kajee

வடக்கில் 3 பாடசாலைகள் இலங்கையின் சிறந்த பாடசாலையாக தேர்வு..!

வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் இலங்கையின் சிறந்த பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இத் தர உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச். எல். ஈ. எஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக மூவர் எஸ்எல்ஈஎஸ் தரம் மூன்று உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள்.

பிரதி அதிபர் பதவிக்கு வடமாகாணத்திலேயே மூன்று எஸ்.எல்.ஈ.எஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளமை இப் பாடசாலைக்கு மட்டுமே ஆகும். அதுமட்டுமல்லாது, வடக்கின் யாழ் மாவட்டத்தில் இருந்து வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ் இந்துக் கல்லூரி என்பனவும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

இத் தர உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச்.எல்.ஈ.எஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக இருவர் எஸ்.எல்.ஈ.எஸ் தரம் மூன்று உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு