Welcome to Jettamil

கொழும்பின் பல பகுதிகளுக்கு 9 மணித்தியால நீர் விநியோகத் தடை

Share

கொழும்பின் பல பகுதிகளுக்கு 9 மணித்தியால நீர் விநியோகத் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளுக்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் 9 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையின் காரணமாக இந்த விநியோகத் தடை அமுல்படுத்தப்படுகிறது.

வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுடன், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொடை, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொடை, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைபடும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை