Welcome to Jettamil

இலங்கையைச் சூழும் வளிமண்டலத் தளம்பல் நிலை – மீண்டும் கனமழை

Share

இலங்கையைச் சூழும் வளிமண்டலத் தளம்பல் நிலை – மீண்டும் கனமழை

இலங்கைக்கு கிழக்கே நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பாகங்களில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 75 mm க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50mm க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை