33 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பௌசர் விபத்து: வாளி வாளியாக அள்ளிச் சென்ற மக்கள்
சுமார் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று பதுளை – கொழும்பு வீதியில் புவக்கஹாவெல பகுதியில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
விபத்திற்குள்ளான பௌசரிலிருந்து பெருமளவில் எரிபொருள் வெளியேறிய நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் வாளி, கேன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி எரிபொருளை அள்ளிச் சென்றுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.




