ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் இந்தியக் கப்பல்கள் கட்டணம் தரவில்லை – இந்தியாவிற்கான ஈரானிய தூதர் விளக்கம்
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் இந்திய எண்ணெய் டாங்கர்களிடம் ஈரான் சுங்கக் கட்டணம் (Tolls) வசூலிப்பதாக வெளியான செய்திகளை இந்தியாவிற்கான ஈரானிய தூதர் முகமது ஃபதாலி (Mohammad Fathali) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியக் கப்பல்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் நீரிணையைத் தடையின்றி கடந்து செல்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் முற்றுகை எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்கு ஈரான் முன்னுரிமை அளிப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், ஈரானும் இந்தியாவும் நல்லுறவைப் பேணி வருகின்றன; இரு நாடுகளும் பொதுவான நலன்களையும் பொதுவான விதியையும் பகிர்ந்து கொள்வதாக நாங்கள் நம்புகிறோம்” எனத் தூதர் ஃபதாலி உணர்ச்சிகரமாகத் தெரிவித்துள்ளார்.




