கனடாவில் நள்ளிரவு பயங்கரம்! இலங்கை இளைஞன் கொடூரக் கொலை
கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்திலுள்ள ஏஜாக்ஸ் (Ajax) நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இலங்கை இளைஞன் மீது கொ**டூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டுள்ளனர்.
அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் சஞ்சுல பெரேரா என அந்நாட்டுப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.




