ஈரான் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்! – மத்திய கிழக்கில் அசுர வேகத்தில் தீவிரமடையும் போர் பதற்றம்!
ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தெற்கு ஈரானிய நகரமான சிரிக் அருகே அமைந்துள்ள பமானி மாவட்டத்தைக் குறிவைத்து அமெரிக்கப் போர் விமானங்கள் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில் அந்தப் பிராந்தியத்தின் மிக முக்கிய இரண்டு நீர்த்தேக்கங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.





