யாழ்ப்பாணம் – வடமராட்சி, துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டபோதும் பொதுமக்களின் துரித செயற்பாட்டினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
துன்னாலை – அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்திலிருந்து தீ பரவி புகை வெளியேறுவதை அதவானித்த அங்கிருந்தவர்கள் மற்றும், அருகிலுள்ள ஆலயத்திற்க்கு சென்றவர்கள், துரிதமாக செயற்பட்டு,
தீயணைப்பு இரசாயனத்தையும், மணல் மண்ணையும் பயன்படுத்தி தீயை அணைத்ததுடன் உடனடியாகவே மின்சார சபைக்கும் அறிவித்தனர்.
துரிதமாக செயற்பட்ட மின்சாரசபை மின் இணைப்பினையும் துண்டித்ததன் காரணமாக பல கோடி ரூபா பெறுமதியான திருமண மண்டபம் காப்பாற்றப்பட்டுள்ளது. இச் சம்பம் காரணமாக குறித்த பகுதியில் நேற்றய தினம் சில மணி நேரம் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.