மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில், 03/08/2023 திகதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து நடை பயணம் ஆரம்பமாகும் என மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு மலையக எழுச்சி பயண வட மாகாண ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
அந்த ஏற்பாட்டுக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் உள்ளதாவது,
கிளிநொச்சி டிப்போ சந்தி முதல் வைரவர் கோவில் வரை நடை பயணம் இடம் பெறும். வைரவர் கோவிலில் இருந்து வாகன பேரணி ஊடாக 55 ஆம் கட்டையை சென்றடைந்து, 55ம் கட்டை முதல் இரணைமடு சந்தி வரை நடை பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து இரணைமடு சந்தியில் இருந்து வாகனப் பேரணியாக இந்துபுரம் தேவாலயம் சென்று, இந்துப்புரம் தேவாலயம் முதல் பல்கலைக் கழக சந்தி வரை நடை பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து பல்கலைக் கழக சந்தியில் இருந்து வாகன பேரணியாக சென்று, திருமுருகண்டி கோயில் பகுதியில் நடை பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து திருமுருகண்டியில் இருந்து வாகன பேரணியாக மாங்குளம் சென்று, மாங்குளம் யுவசக்தி அலுவலகத்தி ற்கு முன்பாக இருந்து மாங்குளம் புனித அக்னேசு தேவாலயம் வரை நடை பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து மாங்குளத்தி ல் இருந்து வாகனப் பேரணி ஊடாக கனகராயன் குளம் சென்று, கனகராயன் குளம் நகரப் பகுதியில் நடை பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து கனகராயன் குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக புளியங்குளம் சென்று, புளியங்குளம் முத்து மாரியம்மன் கோவிலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நடை பயண குழுவினருட ன் யாழ்ப்பாண மாவட்ட நடை பயண குழுவினரும் இணைந்து, முத்து மாரியம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட நடை பயண ஏற்பாட்டு குழுவினர் ஏற்பாடு செய்துள்ள வழிபாடுகளில் கலந்து கொண்டு அவர்களுடன் இணைந்து அங்கிருந்து புளியங்குளம் நகரப் பகுதி வரை நடை பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து புளியங்குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக ஓமந்தை சென்று, ஓமந்தை நகரப் பகுதியில் நடைப் பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து ஓமந்தையில் இருந்து வாகனப் பேரணி ஊடாக தாண்டிக்குளம் சென்று, தாண்டிக்குளம் நகரப் பகுதியில் நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து தாண்டி குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக வவுனியா பழைய பேருந்து நிலையம் சென்று, பழைய பேருந்து நிலையம் முன்பாக நடை பயணம் இடம் பெறும்
வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மண்டபத்தில் மாலை 3 மணிக்கு மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு மலையக எழுச்சி பயணத்தின் வவுனியா ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்துள்ள மலையக எழுச்சி பயணத்தின் நோக்கம் குறித்தும் மலையகம் 200 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சிறப்புரைகள் இடம்பெறும்.
பின்னர் அன்று இரவு வவுனியாவில் ஓய்வில் ஈடுபட்டு, மீண்டும் 04/08/2023 காலை 5 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவிலில் இருந்து மதவாச்சி நோக்கி நடை பயணம் இடம்பெறும் – என குறிப்பிடப்பட்டுள்ளது.