Welcome to Jettamil

இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு : மக்களுக்கு எச்சரிக்கை

Share

இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டளவியல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம், அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் காலை வேளையில் பனியுடன்கூடிய காலநிலை நிலவக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை