அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்க வேண்டுமென்றால் சமகாலத்தில் ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சாத்தியம் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள் கையிருப்பு தேவைப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் சம்பள உயர்வை அடைவதற்கு அரச சேவையை மட்டுப்படுத்த வேண்டும்.
வருவாயை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீண் செலவுகளை அவதானிக்க வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் மாத்திரமே நல்ல வருமானத்தை பெற முடியும் என எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.