தமிழக தென் கடற்கரையை ஒட்டியும், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய இலங்கை பகுதியிலும் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக,
இன்று (03) திங்கட்கிழமை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (04) செவ்வாய்க்கிழமை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பிற மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.