அமெரிக்கா – ஈரான் இடையிலான தற்போதைய போர்நிறுத்தம் மிகவும் பலவீனமானது – சீனா விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்கா – ஈரான் இடையிலான தற்போதைய போர்நிறுத்தம் மிகவும் பலவீனமானது எனச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முஹம்மது இஷாக் தாருடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ள அவர், போர்நிறுத்தத்தைச் சீர்குலைக்கும் அல்லது மோதலைத் தூண்டும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சர்வதேச சமூகம் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கஷ்டப்பட்டு எட்டப்பட்ட இந்த அமைதிச் சூழலைப் பாதுகாப்பதே இப்போதைய முன்னுரிமை எனச் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மோதலைத் தீர்ப்பதில் பாகிஸ்தான் ஒரு பெரிய பங்கினை ஆற்றுவதை நோக்கிச் சீனா மகிழ்ச்சியடைவதாகவும், அமைதி முயற்சிகளுக்குத் தானும் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் பெய்ஜிங் அறிவித்துள்ளது.




