ரணிலின் இல்லத்தில் சிஐடி அதிகாரிகள்! பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் அதிரடி விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு இல்லத்திற்கு இன்று (ஏப்ரல் 24) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் மனைவியும், பேராசிரியருமான மைத்ரி விக்ரமசிங்கவிடம் விசேட வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே நடைபெற்று வரும் ஒரு குறிப்பிட்ட விசாரணை தொடர்பாக அவரிடம் தகவல்களைக் கோரி, தற்போது வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





