செஞ்சோலையில் விமான தாக்குதில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் நினைவேந்தல் நேற்று (14) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக கூடியிருந்த பாடசாலை மாணவர்கள் மீது ஸ்ரீலங்கா வான் படையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 53 மாணவர்கள் உட்பட 57 பேர் படுகொலை செய்யப்பட்ட நாளினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நினைவு கூர்ந்தனர்.
யாழ்ப்பாணம் நூல் நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.