Welcome to Jettamil

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை!

Share

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 3, 2025) பெரும்பாலும் மழையற்ற சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வரும் விடயங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை