இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது
5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா இல்லாது இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு குடியகல்வு நிறுவனத்தில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதற்காகவே இந்த சந்தேகநபர் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ் நல்லூர் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரியாக இருந்தார்.
கடந்த 20ஆம் திகதி பிற்பகல், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு பிறகு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் வெலிசறை தடுப்பு முகாமில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.