உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டத்திலான கடன் தொகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கடன் வழங்குவது இதுவே முதல் முறை.