ஈரானின் உளவுப்பிரிவுத் தலைவர் பெஹ்னாம் ரெசாய் பலி! இஸ்ரேலியத் தாக்குதலை உறுதிப்படுத்தியது ஈரான்
ஈரானியப் புரட்சிகரக் காவற்படையின் கடற்படை உளவுப்பிரிவு இயக்குநரகத்தின் தலைவரான பெஹ்னாம் ரெசாய், இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் நேற்று (03.04.2026) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 26 அன்று ஈரான் மீதான பாரிய வான்வழித் தாக்குதலில் ரெசாய் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பல நாட்களாக மௌனம் காத்து வந்த ஈரான் தற்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
பிராந்திய நாடுகள் குறித்த இரகசிய உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், பல்வேறு சர்வதேச உளவு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் ரெசாய் மிக முக்கியப் பங்காற்றியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மார்ச் 27 அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற போதிலும், ஈரானியத் தலைமை இப்போதுதான் அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவரது மறைவு ஈரானின் உளவுத்துறைக் கட்டமைப்பிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.




