Welcome to Jettamil

நயினாதீவு ராஜமஹா விகாரையில் கண்டி பெரஹரா

Share

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ராஜமஹா விகாரையில் நேற்றையதினம் (31.10) கண்டி பெரஹரா ஊர்வலம் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் கண்டிப் பெரஹரா ஊர்வலமானது நயினாதீவு அம்மன் ஆலய பின்புற வீதியில் இருந்து ஆரம்பமாகி அங்கிருந்து நயினாதீவு ராஜமஹா விகாரைவரை சென்று நிறைவடைந்தது

இதில் கண்டிய நடனம், மயில்லாட்டம், ஒயில்லாட்டம், ஆதிவாசிகள் நடனம், இந்திய கதகளி நடனம், காவடியாட்டம், கோலாட்டம், குறவர் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடனான ஊர்வலம் இதன்போது இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண கடற்படைத்தளபதி ஜெனரல் ரீ.எம்.ஏ.ஏ தென்னக்கோன் கலந்துகொண்டார். அவர் நயினாதீவு ராஜ மஹா விகாரை இடம்பெற்ற பிரித் பாராயண சமய நிகழ்விலும் கலந்துகொண்டார்

இவ் பிரித்பாராயண சமய நிகழ்வினை வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி நாயக்க தேரர் நிகழ்த்தினர்.

இதில் கடற்படையினர்கள், இராணுவத்தினர்கள், பெளத்தகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை