Welcome to Jettamil

நேட்டோவிலிருந்து விலகுவோம்! – ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

trump new 2

Share

நேட்டோவிலிருந்து விலகுவோம்! – ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

ஈரான் போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என மீண்டும் எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின விருந்தில் உரையாற்றிய அவர், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க உதவ மறுக்கும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை “காகிதப் புலிகள்” எனச் சாடியுள்ளார்.

“நமக்கு மிகவும் மோசமான கூட்டாளிகள் உள்ளனர், இனி அவர்களின் உதவி தேவையில்லை” என அவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இராஜதந்திரப் போர் முற்றியுள்ள நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அடுத்த வாரம் வொஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஈரானுடனான போர் நிலைமை மற்றும் அத்திலாந்திக் கூட்டணி நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அவர் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1949-இல் உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி தற்போது பெரும் உடைவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் தங்களது இராணுவப் பங்களிப்பை அதிகரிக்கத் தவறினால், அமெரிக்காவின் பாதுகாப்பு நிழல் அவர்களுக்குக் கிடைக்காது என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான் உடனான போரில் ஐரோப்பிய நாடுகளின் மந்தமான செயல்பாடுகள் அமெரிக்க நிர்வாகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

மார்க் ரூட்டேவின் இந்த விஜயம், சிதைந்து வரும் நேட்டோ கூட்டணியைச் சீரமைக்குமா அல்லது அமெரிக்காவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்துமா என்பதே இப்போது சர்வதேச அளவில் எழுந்துள்ள கேள்வி.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை