வடக்கு எல்லை மற்றும் ஹைஃபா பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு – ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் புதிய வியூகம்!
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வடக்கு கட்டளைத் தலைமையகத்தில் (Northern Command) இராணுவ ஆய்வுகளை முடித்துக்கொண்டு, இன்று மெரோம் ஹகலீல் (Merom HaGalil) பகுதிக்கு விஜயம் செய்தார்.
அங்கு போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள எல்லைக் கிராமங்கள், வடக்கு பிராந்தியம் மற்றும் ஹைஃபா (Haifa) புறநகர்ப் பகுதிகளின் உள்ளூர் அதிகாரசபைத் தலைவர்களைச் சந்தித்து அவர் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் பாதுகாப்பாகத் தமது வீடுகளுக்குத் திரும்புவதை உறுதி செய்வதே எமது முதன்மை இலக்கு என நெதன்யாகு இதன்போது தெரிவித்தார்.
எல்லைக் கோட்டில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காகப் பாதுகாப்பு வலயங்கள் பலப்படுத்தப்படும் என்றும், ஹைஃபா உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் (Iron Dome) மேலும் நவீனமயப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நாங்கள் போரை விரும்பித் தொடங்கவில்லை, ஆனால் எமது மக்களைப் பாதுகாக்கப் போரை வெற்றிகரமாக முடிப்போம் என நெதன்யாகு உள்ளூர் தலைவர்களிடம் தெரிவித்தார்.
எல்லையோரப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க விசேட நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.







