ஓமானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக குழு சந்தேக நபர் மிதிகம சூட்டி
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மிதிகம சூட்டி எனப்படும் பிரபாத் மதுஷங்க இன்று அதிகாலை ஓமானிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவருக்கு எதிராக சர்வதேச பொலிசாரினால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஓமான் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவரை இலங்கை அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மூவர் ஏற்கனவே ஓமானிற்கு சென்றிருந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் சந்தேக நபருடன் நாடு திரும்பியுள்ளனர்.





