Welcome to Jettamil

எரிபொருள் நிரப்பும் வாகனங்களை கண்காணிக்க அலைபேசி செயலி

Share

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வரும் வாகனங்களைக் கண்காணித்து, ஏனைய நிரப்பு நிலையங்களுடன் உடனடியாக தரவுகளை பரிமாறிக் கொள்ளும் திறன் கொண்ட அலைபேசி செயலி ஒன்று தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இந்த அலைபேசி செயலி பொலிஸ் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெறும் வாடிக்கையாளரின் வாகனத்தின் பதிவு இலக்கம், மற்றும் தரவுகள் அலைபேசி செயலியுடன் இணைக்கப்படும்.

இந்த தரவுகள் உடனுக்குடன்,  அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பரிமாறிக்கொள்ளப்படும்.

வாகனத்தின் இலக்கத்தை உள்ளீடு செய்த பின்னர், அன்றைய தினம் வேறு இடத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டதா என்பதை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் நெருக்கடியை தவிர்க்கவும் ஒழுங்குபடுத்தவும் முடியும் என, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை