Welcome to Jettamil

உணவுப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்க நல்லூரில் விசேட திட்டங்கள்

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரண்டு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நல்லூர் பிரதேசசபையில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் . வறுமையில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இரண்டு வேலைத் திட்டங்கள்  முன்னெடுக்கப்படவுள்ளன.குறுங்கால வீட்டுத் தோட்டப்பயிர் செய்கையை ஊக்குவித்தல், விதைகள் நாற்றுகள்  மற்றும் இயற்கைப் பசளை வழங்கப்பட்டு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

உணவுப்பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காணி உள்ளவர்கள் வீட்டுத்தோட்டங்களை மேற்கொள்ளவேண்டுமெனவும் அதற்குத்தேவையான உதவிகளை நல்லூர் பிரதேச சபை வழங்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை