அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சுக்கள் தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இடைக்கால நிவாரண வரவுசெலவுத் திட்டத்தில் பொதுத் துறையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமரின் ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.