எரிசக்தி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை கோரிய உதவியை ரஷ்ய தரப்பு பரிசீலித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சக்திவள நெருக்கடியில் இருந்து விடுபட உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கை அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் பரிசீலனை செய்துவருவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கை தரப்பு ரஷ்யாவின் உதவியை நாடுவதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தியதன் விளைவாக கொரோனா தொற்றுநோய் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை விளைவித்துள்ளது மற்றும் அதன் விளைவாக போதுமான எரிபொருளை நாடு வாங்க முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது என ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.நாட்டில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும் ரஷ்யாவின் செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.