இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த நியூ டயமண்ட் கப்பலால் கிழக்கு கரையோரத்தில் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு கப்பலின் காப்புறுதி நிறுவனமும் கப்பல் நிறுவனமும் 22 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக அறவிட வேண்டும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேற்படி அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.